அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

மரக்கன்றுகள் நடவு 

வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் க.செல்வராசு தலைமையில் நடைபெற்ற விழாவில் வாலிகண்டபுரம்| ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story