உலக மீனவர் தினம்- முன்னாள் அமைச்சர் மீனவர்களுடன் கொண்டாட்டம்

உலக மீனவர் தினம்- முன்னாள் அமைச்சர் மீனவர்களுடன் கொண்டாட்டம்
மீனவர் தின கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வாவத்துறையில் அமைந்து உள்ள புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் அகில உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டது. பங்கு பணியாளர் லிகோரியஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் குமரி கிழக்கு மாவட்ட கழகசெயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவர்களுடன் கேக் வெட்டி உலக மீனவர் தின விழாவை கொண்டாடினார். பின்னர் அங்கு திரண்டு இருந்த மீனவர்களுக்கும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கேக் ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மற்றும் ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், மாவட்ட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story