உலக மீனவர் தினம். - குமரி எம்.எல்.ஏ. வாழ்த்து

உலக மீனவர் தினம். - குமரி எம்.எல்.ஏ. வாழ்த்து
தளவாய் சுந்தரம்
அகில உலக மீனவர் தினம் முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாநில அமைப்பு செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளிய ட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் ஆண்டு தோறும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் மாதம் 21-ந்தேதியில் மீனவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் ஏறக்குறைய 7515 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில், சுமார் 1076 கிலோ மீட்டர் கடற்கரையை கொண்டுள்ளது தமிழ்நாடு. மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நிலை நாட்டவும், மீனவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், எதிர்பார்ப்புகள் நிறைவேறவும், அவர்களின் உள்ளம் மகிழவும் உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் மீனவர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று, சிறந்து விளங்கி வாழ்வில் உயர்வடைய இறைவனை வேண்டி அனைவருக்கும் உலக மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story