தேசூர் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

தேசூர் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

மாற்றுத்திறனாளிகள் தினம் 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நா. அனந்தராஜன், சிறப்பு பயிற்றுநர் பூங்காவனம், பள்ளி ஆசிரியர்கள் பச்சையப்பன், உமா மகேஸ்வரி, மைய பொறுப்பாளர் வசந்தி, அமைப்பாளர் புவனேஸ்வரி, மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

Tags

Next Story