உலக கண் நீர் அழுத்த நோய் தின விழிப்புணர்வு பேரணி

ராஜபாளையத்தில் உலக கண் நீர் அழுத்த நோய் தினத்தை முன்னிட்டு கண்ணொளி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் கிருஷ்ணன் கோவிலில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் தினத்தை முன்னிட்டு கண் ஒளி குறித்தும் , கண் அழுத்த நோயின் சிகிச்சை மற்றும் விழித்திரை நோய் சிகிச்சை பற்றியும் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்த பேரணியில் இராஜபாளையம் மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த தனியார் கல்லுரி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டு பேரணியில் கலந்து கொண்டனர் இந்த பேரணியில் இராஜபாளையம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஜெயராம் , கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுதா டாக்டர் பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு கண் நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர்

Tags

Next Story