அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம்


குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.


குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் முதல்வர் ரேணுகா தலைமையில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரேணுகா பேசியதாவது: ஒவ்வொரு மாணவரும் தாய் மொழியை நேசிப்பதுடன், அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தாய்மொழி மனிதனுக்கு வாழ்வியலை கற்றுத்தருகிறது. உலக அரங்கில் தாய்மொழியை உயர்த்திப் பிடித்த தமிழ் அறிஞர்களை நன்றியோடு நினைவு படுத்த வேண்டும்.


கண்ணதாசன் தமிழ் இலக்கியம், தமிழின் தொன்மை அறிந்து கொள்வதுடன், தமிழை படிப்பதனால் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். பிறமொழி கலப்பின்றி தமிழ் பேச வேண்டும், இருப்பதை தமிழ் வளர்ச்சிக்கு ஈகை செய்து, தமிழுக்காக ஓய்வின்றி உழைத்தால் தமிழும், தமிழ் இனமும் வளரும். தாய்மொழியை இகழ்பவரை கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேராசிரியர்கள் ரகுபதி, சரவனாதேவி, மாணவர்கள் சுபாஷ் மற்றும் அஜித் பேசினார்கள்.

Tags

Next Story