உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

உறுதிமொழி ஏற்பு 

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த உலக செவிலியர் தின விழாவில் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, செவிலிய கண்காணிப்பாளர் பூங்கா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவர்கள் கேசவன், பிரேமலதா, சுமதி, ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க மாநிலத் தலைவர் சக்திவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு பங்கேற்று, நோயாளிகளை காப்பாற்றுவதில் செவிலியர்களின் பங்கு குறித்து பேசி, அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற செவிலிய கண்காணிப்பாளர்கள் கே.ராணி, பி.கே.ராணி, உமா ஆகியோரது பணியை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழிமொழியேற்றனர்.

Tags

Next Story