உலக மண் வள தினம் - விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

உலக மண் வள தினம் - விவசாயிகளுக்கு  விழிப்புணர்வு

விழிப்புணர்வு முகாம் 

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டாரம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகைமை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ரபி பருவ இரண்டாம் கட்ட பயிற்சியானது கோவிலூர் மற்றும் தென்தண்டலம் கிராமத்தில் 25 விவசாயிகளை கொண்ட குழுவிற்கு, வேளாண் உதவி இயக்குநர் செல்வராஜ் தலைமையில் வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் துணை வேளாண்மை அலுவலர் சைதன்யம் ஆலோசனையுடனும், வட்டார மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் கிராம முதன்மை அலுவலர்களாலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் வேளாண் துறையின் திட்டங்கள் சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துறைக்கப்பட்டது. மேலும் இன்று உலக மண் வள தினைத்தை முன்னிட்டு மண் வள மேலாண்மை , மண் பரிசோதனை , இயற்கை மேலாண்மை போன்ற மண் வளத்தை மேம்படுத்தும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது. அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் அ. செண்பகம் மற்றும் ம.ஜெனிபர் தமிழ் மண் வளம் செயலி குறித்து விளக்கமளித்தனர். இப்பயிற்சியில் வேளாணதுறை மற்றும் சகோதரத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story