திருவாரூரில் உலக சிக்கன நாள் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருவாரூரில் உலக சிக்கன நாள் -  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

உலக சிக்கன நாளையொட்டி பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

திருவாரூரில் சிக்கனத்தில் இன்றியமையாயை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக அக்டோபர் 30ஆம் நாள் ஆண்டுதோறும் 'உலக சிக்கன நாள்' கொண்டாடப்படுவதை குறித்து மாவட்ட ஆட்சியர் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.மேலும் சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கை குறியதாக மாற்றுகிறது சேமிப்பது மட்டுமல்ல அதை சரியான விதத்தில் முதலில் செய்வது முக்கியம். உலக சிக்கன நாள் கொண்டாடும் இந்த வேளையில் மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் தங்கள் வாழ்வில் வளம் சேர்ப்பதுடன் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரிந்திடுமாறு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்


Tags

Next Story