சாத்தூரில் உலக காசநோய் தின விழிப்புணர்வு வாகன பேரணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உலக காசநோய் தின விழிப்புணர்வு வாகன பேரணி சாத்தூர் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவன அமைப்பு சார்பில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோய் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. காசநோய் பற்றியும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஒட்டிய ஆட்டோக்கள் பேரணியை சாத்தூர் எம் எல் ஏ மருத்துவர் ரகுராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் மெர்சி அன்னபூரணி நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்திருந்தார். விழிப்புணர்வு பதாகைகள் அடங்கிய ஆட்டோக்கள் சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்வே பீடர் ரோடு வழியாக முக்குராந்தல் மெயின் ரோடு பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்றது. காசநோய் அற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags

Next Story