செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தின விழா

செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தின விழா

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தின விழா நடைபெற்றது.

திருமயம் அருகே லேனாவி லக்கில் அமைந்துள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தினம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் .செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் செல்வராஜ் , நிர்வாக இயக்குநர் .வயிரவன் செயலா்.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் பொருட்செல்வன் வரவேற்றார். பின் மாணவர்களுக்கு யோகா பற்றி அமைப்பியல் துறை விரிவுரையாளர் அஜித்குமார் பேசினார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை ஆத்மா யோகா நிறுவனர் மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் கிளை இயக்க முன்னாள் தலைவர் .யோகா பாண்டியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகா செய்வதன் முக்கியத்துவம் பற்றியும், யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பேசினர்.

மேலும், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியில் கர்ம யோகம், ஞானயோகம், இராஜயோகம், ஹடயோகம் போன்ற யோகா பயிற்சி அளித்தனர்..

Tags

Next Story