ஈரோட்டில் ஆவின் பால் பாக்கெட்டில் புளு

ஈரோட்டில் ஆவின் பால் பாக்கெட்டில் புளு- பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு வீரப்ப சத்திரம் காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சத்யபிரியா. இவர்களுக்கு 6 மாத கை குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சத்யா தனது குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அவரது வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் ஆவின் டிலைட் பால் பாக்கட் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த சத்யபிரியா வீட்டில் பால் காய்ச்ச முயற்சிக்கும் போது அதில் சிறிது சிறிதாக புளுக்கள் மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சத்யா மளிகை கடையில் சென்று முறையிட்டபோது ஆவின் பால் ஏஜென்ட் மூலமாக தான் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் , ஆனால் இதுவரை ஆவின் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

Tags

Next Story