அங்காளபரமேஸ்வரி கோவிலில் வழிபாடு

அங்காளபரமேஸ்வரி கோவிலில் வழிபாடு
சிறப்பு பூஜை 
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில், ஓச்சேரி சாலையில் உள்ள ஆதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களாலும், பழங்களாலும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

மழை வேண்டி வேதமந்திரங்கள் ஓதப்பட்டது. இதில் ஓச்சேரி, மேலபுலம், சிறுவளையம், அவளூர், நெடும்புலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story