சீயாண்டவர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு

X
சீயாண்டவர் கோவில்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சீயாண்டவர் கோயிலில் இலட்சதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம் ,கீழூர், மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை , விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை உட்பட்ட எட்டு ஊர் கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு சீயாண்டவர் திருக்கோவிலில் இரவு இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
