மோட்ச தீபம் ஏற்றி தேமுதிகவினர் வழிபாடு

மோட்ச தீபம் ஏற்றி தேமுதிகவினர் வழிபாடு

வழிபாடு 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 30-ம் நாள் நினைவையொட்டி அவர் மோட்சம் அடைய வேண்டி விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் தே.மு.தி.க.வினர், மோட்சதீபம் ஏற்றி வழிபட்டனர்.
தே.மு.தி.க. தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் 30-ம் நாள் நினைவு நாளையொட்டி அவர் மோட்சம் அடைய வேண்டி விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள பழமைவாய்ந்த கைலாசநாதர் கோவிலில் தே.மு.தி.க.வினர், மோட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் அறிவுரையின் பேரில் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வில் விஜயகாந்த் மன்ற துணைச் செயலாளர் ராஜசந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆத வன்முத்து, நகர தலைவர் சிவா, நகர துணைச்செயலாளர் வேம்பு மயிலப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணபிரான், ஆனந்த், வக்கீல் அணி செயலாளர் பாலாஜி, நகர அணி நிர்வாகிகள் கணேசன், செல்வா, கோபிரமணா, வெங்கடேசன், உதயா மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story