மல்யுத்த போட்டி: 6மாநில வீரர்கள் பற்கேற்பு

மல்யுத்த போட்டி: 6மாநில வீரர்கள் பற்கேற்பு

மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

தென்னிந்திய அளவிலான மல்யுத்த போட்டியில் 6 மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பற்கேற்றனர்.

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த அசோசியேசன் சார்பில் 11.வது தென்னிந்திய மல்யுத்த போட்டிகள் ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிசந்தை வளாகத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 18 முதல் 36 வயதுக்குட்பட்ட 180 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ப்ரி ஸ்டைல் மற்றும் கிரிகோ ரோமன் ஆகிய இரண்டு வகைகளில், எடை மற்றும் வயதை அடிப்படையாக கொண்டு 30 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒட்டு மொத்த போட்டிகளில், 17 தங்க பதக்கங்களை கர்நாடகா வென்றது.

இதில் வெற்றி பெற்ற வீரர்கள் புனே.வில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என மல்யுத்த சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்..

Tags

Next Story