உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, +2 மாணவி தற்கொலை!

உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, +2 மாணவி தற்கொலை!
பிளஸ் டூ மாணவி தற்கொலை
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மாணவி உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த தம்பதியர் கஜேந்திரன் - ரம்யா, இவர்களது மகள் செளமியா (17), இவர் அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். செளமியாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, இதற்காக இவரது பெற்றோர்கள் கடன் வாங்கி செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட செளமியாவுக்கு மருத்துவ செலவு செய்ய முடியாமல் பெற்றோர் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து மன உளைச்சலில் இருந்த செளமியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் அறையை சோதனை செய்ததில் இறப்பதற்கு முன் உருக்கமாக எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் இனிமேல் நான் உங்களுக்கு செலவு வைக்க மாட்டேன், எனக்கு செலவு செய்யும் பணத்தில் வீட்டை கட்டி முடிக்கவும் என்று செளமியா எழுதியிருந்தார். பள்ளி மாணவி உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story