பரமத்தி வேலூரில் எழுத்தாளர் கலைஞர் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி

எழுத்தாளர் கலைஞர் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, "எழுத்தாளர் கலைஞர்" குழுவின் சார்பில், அமைக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் வருகை புரிந்த "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தியினை மாவட்ட எல்லையான பரமத்தி வேலூரில் பைபாஸ் அருகே நாமக்கல் மேற்கு திமுக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் வரவேற்று டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய திமுக செயலாளர்கள் பி.பி.தனராசு, கே.கே .சண்முகம், எம்.தங்கவேல், ஏ.பி.ஆர்.சண்முகம், ஆர்.செல்வம், ஆ.இளங்கோவன், பேரூர் திமுக செயலாளர்கள் ஆர்.கருணாநிதி, எம்.ரமேஷ்பாபு, பி.முருகன், எம்.ராமலிங்கம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.எழுத்தாளர் கலைஞர்" "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி

Tags

Next Story