கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்காக எழுத்து தேர்வு - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்காக எழுத்து தேர்வு - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு


கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுத்து தேர்வு நடைபெற்றது
தேனி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய இளநிலை உதவியாளர், உதவியாளர் என 48 பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதற்கென 39 அறைகள் ஒதுக்கப்பட்டது,முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற எழுத்து தேர்வில் 762 தகுதியான விண்ணப்பதாரர்களில் 685 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 77 நபர்கள் எழுத்து தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இன்று நடைபெற்ற இத்தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்

Tags

Next Story