சேலம் : கூட்டுறவுத்துறை காலிபணியிடங்களுக்கான எழுத்து தேர்வு

சேலம் : கூட்டுறவுத்துறை காலிபணியிடங்களுக்கான எழுத்து தேர்வு

சேலத்தில் 4 மையங்களில் கூட்டுறவுத்துறை எழுத்து தேர்வு 

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சேளத்தில் நான்கு மையங்களில் 2,812 பேர் தேர்வெழுதினர்
கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி சேலம் அரசு கலைக்கல்லூரி, சவுடேஸ்வரி, ஜெய்ராம், கணேஷ் கலை அறிவியல் கல்லூரி என 4 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 3,165 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 2,812 பேர் எழுதினர். 353 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சவுடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பழனிவேலு, சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags

Next Story