7 மையங்களில் காவல்துறை பதவிக்கான எழுத்து தேர்வு -எஸ்பி ஆய்வு

7 மையங்களில் காவல்துறை பதவிக்கான எழுத்து தேர்வு -எஸ்பி ஆய்வு
சோதனை 
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் ,சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை காவலர்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்து தேர்வு 7 மையங்களில் நடைபெற்றது. விருதுநகர் - செந்திக்குமார நாடார் கல்லூரி, வி.வி.வி.பெண்கள் கல்லூரி, திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் கல்லூரி, அருப்புக்கோட்டை, ஸ்ரீசௌடாம்பிகை பொறியியல் கல்லூரியில் காரியாபட்டி, சேது தொழில்நுட்ப கல்லூரியில் சிவகாசி, எஸ்.எப்.ஆர். கல்லூரியில் மற்றும் சிவகாசி, செவல்பட்டி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 9985 விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு எழுத தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டனர் இந்த தேர்வு மையங்களில் தேர்வர்கள் முறைகேடில் ஈடுபடுவதை தவிர்க்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் இந்த மையங்களை மாவட்ட காவல் துறை சீனிவாச பெருமாள் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் மேலும் தீவிர சோதனைக்கு பின்பு தேர்வு எழுதும் நபர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags

Next Story