கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்களுக்கு வரும் 24ல் எழுத்துத் தேர்வு

கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்களுக்கு வரும் 24ல் எழுத்துத் தேர்வு

 கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 140 பணியிடங்களுக்கு வரும் 24ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது.

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 140 பணியிடங்களுக்கு வரும் 24ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 140 உதவியாளர் எழுத்தர் பணியிடங்களை நிரப்பிட சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டு www.drbslm.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இணையவழி பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத்தேர்வு வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சவுடேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 இடங்களில் நடைபெறுகிறது.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு கூட்டுறவு சங்கங்களின் சேலம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், பயனர் குறியீட்டில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து அதற்குரிய கடவுச்சொல் அல்லது விண்ணப்பதாரரின் பிறந்த தேதியை பயன்படுத்தி நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு நாளன்று தேர்வு ஆரம்பிப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக நுழைவுச்சீட்டுடன் காலை 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இந்த தகவலை சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story