முதியவரை தாக்கி செல்போன் பறிப்பு: 2பேர் கைது

முதியவரை தாக்கி செல்போன் பறிப்பு: 2பேர் கைது

பைல் படம் 

காயல்பட்டினம் அருகே முதியவரை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன் மகன் ரஷீக் பரிஸ் (69). இவர் நேற்று மருத்துவமனை சென்றுவிட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் ஆட்டோ மீது மோதியது. பைக்கில் வந்த 2பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த காதர் மைதீன் அவர்களை சத்தம் போட்டாராம்.

இதில் ஆத்திரம் அடைந்த 2பேரும் அவரை தாக்கி, ஆட்டோ கண்ணாடியையும் உடைத்து அவரது செல்போனை பறித்துச் சென்று விட்டார்களாம். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலையயத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரம்ம குமார் வழக்குப் பதிந்து காயல்பட்டினம் பாலிமர் தெருவைச் சேர்ந்த மீராசா மரைக்காயர் மகன் மாலிக் அசன் (22), இப்ராகிம் மகன் முத்து முகம்மது (27) ஆகிய 2பேரையும் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தார்.

Tags

Next Story