அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீண்டும் மஞ்சள் பை  விழிப்புணர்வு நிகழ்ச்சி

மஞ்சள் பை

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக. மீண்டும் மஞ்சள் பை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. குமாரபாளையம் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரிய உதவிப் பொறியாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றி, 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள் பைகள் வழங்கினார். நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி, வணிகவியல் துறைத்தலைவர் இரகுபதி, தமிழ்த்துறைத்தலைவர் ஞானதீபன், மாசுக்கட்டுபாடு வாரிய அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story