ராசிபுரத்தில் ராம நவமி விழா நிறைவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா

ராசிபுரத்தில் ராம நவமி விழா நிறைவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா

மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ராசிபுரத்தில் ராம நவமி விழா நிறைவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராம நவமி விழா முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு ராமர் கோயில்களில் தினந்தோறும் பூஜைகள் அபிஷேகம் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ராசிபுரம் நாயுடுகள் பஜனை மடத்தில் 11 நாட்களாக பல்வேறு ராமர் சீதை நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள்,

பஜனை பாடல்கள், கோலாட்டம் மற்றும் ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனுமன் பூஜை, மேலும் மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இறுதி நாளை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தண்ணீரை ஒருவருக்கொருவர்,

எடுத்து ஊற்றி சிறப்பாக மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாயுடு சமூக இளைஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story