ஏற்காடு மலர் கண்காட்சி நிறைவு

ஏற்காடு மலர் கண்காட்சி நிறைவு

மலர் கண்காட்சி நிறைவு

ஏற்காட்டில் 22ம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி நேற்று முன் தினம் நிறைவடைந்தது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதாவது இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் காற்றாலை மற்றும் வன உயிரினங்களான பவளப்பாறை, நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர ஆமை, கடல் குதிரை போன்றவை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.

இதுதவிர குழந்தைகளை கவரும் பல்வேறு கார்ட்டூன்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏற்காடு மலர் கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டுகளித்தனர். இதனிடையே கோடை விழா கடந்த 26-ந் தேதியுடன் நிறைவடைந்தாலும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று மலர் கண்காட்சி மட்டும் நேற்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது.

நிறைவு நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். பின்னர் அவர்கள் புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த மலர் கண்காட்சியை பார்வையிட்டு ரசித்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். படகு இல்லத்திலும் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

Tags

Next Story