நத்தம் பஸ் நிலையம் அருகே தேர்தல் பிரசாரம்

நத்தம் பஸ் நிலையம் அருகே தேர்தல் பிரசாரம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

நத்தம் பஸ் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தவாறே நேற்று பிரச்சாரம் செய்தார்.
திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தவாறே நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை வைத்து கூட்டணிக் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்திற்கு வாக்கு கேட்டார். இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஐ. பெரியசாமியும், மேற்கு மாவட்டச் செயலாளரும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணியும் ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கட்சிக்காரர்களையும் பெரும் திரளாகத் திரட்டி இருந்தனர்.

Tags

Next Story