யோகா தினம்: சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சிறப்பு நிகழ்வு

யோகா தினம்: சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சிறப்பு நிகழ்வு
காங்கேயத்தில் யோகா தினத்தை முன்னிட்டு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் சில்ரன் சாரிட்டப்பிள் டிரஸ்ட் சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. காங்கேயத்தை சேர்ந்த சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் பல்வேறு சேவைகள் செய்து வரும் நிலையில் தற்போது உலக யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து அங்கன்வாடி மையங்களிலுள்ள ஆசிரியைகளுக்கும்,

இலவச அடிப்படை யோகா பயிற்சிகளையும், யோகா முத்திரைகளையும் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கான சீருடை மற்றும் தரையில் விரிக்கும் யோகா மேட்டுகளை டிரஸ்ட் சார்பில் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மைய ஆசிரியைகள், சில்ரன் சாரிட்டப்பிள் டிரஸ்ட் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. மோகனாம்பாள், மனவளக்கலை மன்ற தலைவர் பழனிசாமி,யோக பேராசிரியர் மேகநாதன் உட்பட டிரஸ்ட் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story