புதூரில் யோகா தின விழா

புதூரில் யோகா தின விழா

யோகா தினம்

ஈரோடு அருகே உள்ள 46 புதூர் பகுதியில் சர்வதேச யோகாசன விழா கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு அருகே உள்ள 46 புதூர் பகுதியில் சர்வதேச யோகாசன விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு 46 புதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். உலக சமுதாய சேவா சங்கமண்டல திட்டக்குழு தலைவர் பேராசிரியர் உமா மகேஸ் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் உடல் நலம், மன நலம் சார்ந்த யோகாசனங்களை பயிற்சியாளர்கள் பேராசிரியர்கள் பன்னீர்செல்வம், விஜயராணி ஆகியோர் செய்து காட்டினர்.

அதை விழாவில் பங்கேற்ற 46 புதூர் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் ஆர்வமாக செய்தனர். 46 புதூர் ஊராட்சி கிராமிய சேவா திட்டத்தில் நடந்த இந்த விழாவில் ஊராட்சி தலைவர் பிரகாஷ், லக்காபுரம் கல்விக்குழு தலைவர் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அல்-அமீன் கல்லூரி முதல்வர் கமால்பாஷா, கருக்கம்பாளையம் கல்யாண சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story