ராணுவத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற லிங்கில் மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.

அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற லிங்கில் மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அதிகாரி அன்சுல்வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அக்னி பத் திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டுக்கு கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், ராணுவத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திருமணம் ஆகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 2 கட்டங்களாக ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story