பணம் கொடுத்துதான் வாக்கை பெற வேண்டும்

பணம் கொடுத்துதான் வாக்கை பெற வேண்டும்

பணம் கொடுத்துதான் வாக்கை பெற வேண்டும் என ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


பணம் கொடுத்துதான் வாக்கை பெற வேண்டும் என ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதிமுக சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ௯ட்டத்தில் தொடர்ந்து பேசிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் குமரகுரு வாக்காளர்களுக்கு தேவையில்லாமல் அனைவருக்கும் பணம் கொடுக்க கூடாது என்றும் தங்களுக்கு வாக்களிப்பவர்களை அறிந்த அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு 25 பைசா கொடுப்பதற்கு பதிலாக 50 பைசா கொடுத்து அவர்களின் வாக்கை முழுமையாக பெற வேண்டும் என்றும் பேசினார். மேலும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கட்சியில் நிர்வாகிகளை மிரட்டல் தோனியில் வேட்பாளரே பேசியதால் கட்சி நிர்வாகிகள் இடையே மிகவும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story