தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர்கிரா மத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் சங்கவி (வயது 22). நர்சிங் படித்துள்ள இவர் வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். நேற்று வீட் டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கவி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துகொண்டார்.தீஉடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் சங்கவி யின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் சங்கவி பரிதாபமாக இறந் தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கவியின் உடலைகைப்பற்றி பிரேத பரி சோதனைக்காகபெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story