இளம்பெண் மாயம்!

இளம்பெண் மாயம்!

இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

அரசு ஆதரவற்ற காப்பகத்தில் இளம்பெண் மாயம். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இளம் பெண் கடத்தப்பட்டாரா அல்லது ஏதேனும் காரணமா என்று திவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை ஒன்றியம் மாத்துாரில் அரசு ஆதரவற்ற இளம்பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற மாணவ, மாணவிகள், இளம் பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், இங்கிருந்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வேலு மகள் ஜான்சி (17) என்பவர் காப்பகத்தில் இருந்து மாயமானார். இதுபற்றி காப்பக நிர்வாகி மாத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து இளம் பெண் கடத்தப்பட்டாரா அல்லது ஏதேனும் காரணமா என்று திவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story