இளம்பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்!

இளம்பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்!

விராலிமலை அருகே இளம்பெண் மாயனதால், அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

விராலிமலை அருகே இளம்பெண் மாயனதால், அவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பாலாண் டாம்பட்டியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகள் பூபதி (20). பிளஸ் 2 வரை படித்துவிட்டு கீரனுாரில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம்போல் வேலைக்கு சென்ற பூபதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து தந்தை அர்ஜூனன் அளித்த புகாரின்பேரில் மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story