விளவங்கோடு: தட்டி கேட்டவர் மீது கொடூர தாக்குதல்

விளவங்கோடு: தட்டி கேட்டவர் மீது கொடூர தாக்குதல்

கோப்பு படம்

தக்கலை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஆதரவாக பேசிய தொழிலாளியை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது டீக்கடைக்கு சென்றார். அப்போது காட்டுவிளை புங்கரை பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவரும் அந்த கடைக்கு டீ குடிக்க வந்திருந்தார். சிவசங்கர் டீக்கடை உரிமையாளருக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது.

அந்த பணத்தை தருமாறு அவர் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அய்யாத்துரைக்கு ஆதரவாக முத்துசாமி பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசங்கர், முத்துசாமியை தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீஸ் நிலை யத்தில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சிவசங்கரை போலீசார் இன்று கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story