சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி இளைஞர் உயிரிழப்பு

சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி இளைஞர் உயிரிழப்பு

 பழைய தர்மபுரி அருகே சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது. 

பழைய தர்மபுரி அருகே சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சத்தியமூர்த்தி இவர் நேற்று பழைய தருமபுரி பகுதியில் இருசக்கர வாகனத்தை சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சத்தியமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்தியமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்தது விட்டார் என தெரிவித்தனர் இது குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story