ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி

ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி
தென்காசி அருகே ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி
தென்காசி அருகே ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் பரிதாப பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி சக்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஐய்யப்பன் (34). இவர் பன்றி வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் எதிரே சென்னையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story