ஆலங்குளத்தில் பெண்ணிடம் நகைப் பறிப்பு - இளம்பெண் கைது

ஆலங்குளத்தில் பெண்ணிடம் நகைப் பறிப்பு - இளம்பெண் கைது

இளம்பெண் கைது

ஆலங்குளத்தில் பெண்ணிடம் நகைப் பறித்த இளம்பெண் கைது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியை சோ்ந்த செல்வம் மனைவி ஜோதிலட்சுமி(35). பொன்னுத்தாயுடன் தோழியாக பழகி வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை பொன்னுத்தாயின் வீட்டிற்கு சென்ற ஜோதிலட்சுமி பொன்னுத்தாயிடம் தான் ஏற்கனவே கொண்டு வந்த குளிா்பானத்தை குடிக்க கொடுத்தாராம். இதில் பொன்னுத்தாய் மயங்கினாராம். மயங்கிய நிலையில் இருந்த அவா் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றிய ஜோதிலட்சுமி அதே எடையில் உள்ள கவரிங் நகையை அவருக்கு அணிவித்து விட்டு தப்பி சென்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகை திருடிச் சென்ற ஜோதிலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது, ஆலங்குளத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் திருடிய நகையை விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து நகையைப் பறிமுதல் செய்து, ஜோதிலட்சுமியை போலீஸாா் கைது செய்தனா்.

Tags

Next Story