இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை
இளம்பெண் தற்கொலை
சாத்தான்குளம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்அருகே உள்ள கேட்டவிளை சவேரியார்நகரைச் சேர்ந்தவர் சுயம்பு மகள் சுமதி (27). இவருக்கும் பள்ளக்குறிச்சி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த காசி மகன் சந்தோஷம் என்பவருக்கு கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதிதிருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணம் முடிந்ததில் இருந்து கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது பிடிக்காமல் சுமதி கணவரின் வீட்டில் ஒரு அறையில் தனியாக சமைத்து கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கணவருடன்ஒரு திருமணவிழாவுக்கு சென்ற சுமதி, ஒருநாள் பெற்றோர் வீட்டில் இருந்து பின்னர் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்நேற்று சுமதி, தான் வசித்து அறையில் பனங்கட்டையில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுமதியின் தந்தை சுயம்பு தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்குபதிந்தார். திருமணமாகி 8மாதம் ஆவதால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story