திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!
இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம்,கடம்பூர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமணம் பிடிக்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள வீரபாண்டிய தாழையூத்து கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் மந்திரம். இவரது மகள் சரண்யா (23), இவருக்கு மார்ச் மாதம் திருமணம் நடத்த நிச்சயம் செய்து, அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால், சரண்யாவுக்கு திருமணத்தில் விருப்பமில்லாமல் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கடம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story