இளம்பெண் தற்கொலை – காவல்துறை விசாரணை

இளம்பெண் தற்கொலை – காவல்துறை விசாரணை
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த தங்கையா மகன் ராஜேந்திர குமார் 30 ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி அமுதா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் ராஜேந்திர குமார் 10 நாள் விடுமுறையில் சொந்த ஊரான நடவக்குறிச்சி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்கு வந்து கலந்துவிட்டு நேற்று மறுபடியும் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்ப சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அமுதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதியம் வரை அமுதா வெளியே வராததை கண்டு அக்கம் பக்கத்தினர் வீட்டு நூல் சென்று பார்த்தபோது அமுதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே உறவினர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேந்தமரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story