ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் பலி
மரணமடைந்த கஸ்தூரி
கொல்லம் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலத நல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார், இவரது மனைவி கஸ்தூரி இவர்கள் சென்னையில் உள்ள திரிசூலம் பகுதியில் இந்த நிலையில் கஸ்தூரி 7 மாத கர்பிணி என்பதால் சொந்த ஊரான மேலநீலதநல்லூருக்கு ஊருக்கு சென்று வளைகாப்பு நடத்துவதற்காக சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் ரயிலில் நேற்று இரவு வந்துகொண்டிருந்தார்.

அப்போது ரயிலில் வந்து கொண்டிருந்த போது வாந்தி வந்ததால் படிகட்டில் நின்று வாந்தி எடுத்த போது எதிர்பாரவிதமாக தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார் . கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் சங்கரன்கோவில் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story