8 வயது மகளை தவிக்க விட்டு இளம் பெண் மாயம்

8 வயது  மகளை தவிக்க விட்டு இளம் பெண் மாயம்
மாயமான சகாய ஜெனிட்டா
தக்கலை அருகே 8 வயது மகளை தவிக்க விட்டு மாயமான தாய். போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு கொல்லாய் பகுதி சேர்ந்தவர் மார்ட்டின் ஜோஸ் மனைவி சகாய ஜெனிட்டா ( 34). மார்ட்டின் ஜோஸ் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ரியா (8) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி காலையில் சகாய ஜெனிட்டா களியல் பகுதியில் உள்ள தனது தாயார் ரோஸ்பாயிடம் பேசியுள்ளார். பின்னர் மாலையில் ரோஸ் பாய் செல்போன் மூலம் மகளை தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ரோஸ் பாய் உடனடியாக மகள் வீடு விரைந்தார். அப்போது அவர் வீட்டில் சகாய ஜெனிட்டாவை காணவில்லை. பரியா மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தார். இதையடுத்து ரோஸ் பாய் தக்கலை போலீசீல் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல் போன் எண் வெவ்வேறு பகுதியிலிருந்து சிக்னல் கிடைத்தது. போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story