வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை !

வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை !

 வழக்கு பதிவு

வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை.
வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், அரிஜன தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகள் காயத்ரி வயது 21. காயத்ரிக்கு கடந்த ஒரு வருட காலமாகவே அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம். இதற்காக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தும் அவருக்கு வயிற்று வலி நின்ற பாடு இல்லை. இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி காலை 6 மணியளவில் மீண்டும் வலி அதிகமாகவே, விரக்தி அடைந்த காயத்ரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த காயத்ரியின் தாயார் பிரேமா வயது 43 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், உயிரிழந்த காயத்ரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story