சேலத்தில் வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்

சேலத்தில் வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்

இளம்பெண் மாயம்

சேலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா (36). இவரது கணவர் அப்பு என்கிற முத்து. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் இந்துமதி (19), பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1ம் தேதி வேலைக்கு சென்ற இந்துமதி பின்னர் வீடு திரும்பவில்லை.

அவரை தாய் சங்கீதா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.இதுகுறித்து சங்கீதா நேற்று கிச்சிப்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதியை தேடி வருகின்றனர். இந்துமதி காதல் விவகாரத்தில் வீட்டை விட்டு சென்றாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story