திருமண நிச்சயதார்த்த நாளில்  மாயமான இளம்பெண்

திருமண நிச்சயதார்த்த  நாளில்  மாயமான இளம்பெண்
பைல் படம்
வெள்ளிச்சந்தை அருகே திருமண நிச்சயதார்த்த நாளன்று மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே வெள்ள மோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழிலாளி. இவரது மகள் சௌமி (24). இவருக்கு திருமணம் செய்ய மணமகன் பார்த்து நேற்று நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு தயாராக சில அழகு சாதன பொருட்கள் தேவை என கூறிய சௌமி அதனை கடைக்கு சென்று வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகிய அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனை தொடர்ந்து சவுமியை காணாத பெற்றோர் பல இடங்களிலும் தேடினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் விசாரித்த போது சவுமி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story