விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணியினர் ரத்ததானம்

விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணியினர் ரத்ததானம்

இரத்த தானம் செய்த தவெக கட்சியினர்

விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழக இளைஞரணியினர் ரத்ததானம் செய்தனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக 18-ம் ஆண்டு ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.

இம்முகாமிற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவரும் மற்றும் கட்சி இளைஞரணி நிர்வாகிகள் பலரும் ரத்ததானம் செய்தனர். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிருத்திவிராஜ்,

விக்கிரவாண்டி ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் சிவமூர்த்தி, துணை செயலாளர் வேட்டைக்காரமணி, காணை ஒன்றிய இளைஞரணி

துணைச்செயலாளர் சுப்பு ராஜ், விழுப்புரம் நகர இளைஞரணி தலைவர் பாலவிக்னேஷ், நகர நிர்வாகிகள் ராபின்ஆப்ரஹாம், அக்ரம், நவீன்குமார் மற்றும் விக்கிரவாண்டி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story