திருமணம் செய்து வைக்காததால் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி

திருமணம் செய்து வைக்காததால் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி

அண்ணனை வெட்டிய தம்பி

கருங்கல் அருகே திருமணம் செய்து வைக்காதத ஆத்திரத்தில் அண்ணனை தம்பி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள கப்பியறை, வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன்கள் லிவின்ஸ்.வின்சென்ட் .இதில் அண்ணன் லிவின்ஸ் வெளிநாட்டில் உள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.

வின்சென்ட்க்கு இன்னும் திருமணமாகவில்லை. சம்பவ தினம் தம்பி வின்சென்ட் கையில் அரிவாளுடன் லிவின்ஸ் வீட்டில் சென்று தனக்கு இதவரை திருமணம் செய்து வைக்கவில்லை நீ மட்டும் நன்றாக இருக்கிறாய் என கேட்டு தகராறு செய்து தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். மேலும் அரிவாளால் அண்ணன் லிவின்சை வெட்ட முயற்சித்துள்ளார்.

அதை தடுக்க முயன்ற போது அவரது கையில் அவரது வெட்டு விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த லிவின்ஸ் அருகில் கிடந்த கம்பியால் வின்செண்டை தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து வின்சென்ட் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லிவின்ஸ் கோழிப்போர் விளை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்த புகார்களின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story