நன்னிலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

நன்னிலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

கோப்பு படம் 

நன்னிலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

நன்னிலம் அருகே உள்ள பெரும்புகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் வயது 25 . இவர் கூலி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது இவர் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளதாகவும் உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்த புகாரின் அடிப்படையில் நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் எதற்காக மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story