திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் நகை மோசடி - வாலிபர் கைது

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் நகை மோசடி - வாலிபர் கைது
கைது
கன்னியாகுமரி மாவட்டம்,ரணியல் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் நகை மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 23 வயது உடைய ஒரு இளம் பெண் தையல் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜு (28) என்பவருக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ராஜூ தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.

அத்துடன் அவரை திருமணம் செய்வதாக கூறி பல கட்டங்களாக சுமார் 14 பவுன் தங்க நகைகளை வாங்கி உள்ளார். இதை அடுத்து இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜுவுடன் கூறினர். அப்போது ராஜு தனக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவலை இளம் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த இளம் பெண் தான் கொடுத்த நகைகளை திருப்பி கேட்டார். ஆனால் ராஜு நகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த வகையில் சம்பவத்தன்று காலையில் இளம் பெண் அவரிடம் நகைகளை கேட்டார். அப்போது ராஜூ அவரை அவதூறாக பேசியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜு மீது போலீசார் வழக்கு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story